Wikipedia

Search results

Friday, April 27, 2018

பயித்தம் பருப்பு சாம்பார் செய்வது எப்படி?


பயித்தம் பருப்பு சாம்பார்


தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம்         -    2
தக்காளி                   -     2
பச்சை மிளகாய்            -     2
பூண்டு                     -     4
மஞ்சள் தூள்               -     3 சிட்டிகை
மிளகாய் தூள்              -     1 தேக்கரண்டி
துவரம் பருப்பு                 100 கிராம்
பயித்தம் பருப்பு                50 கிராம்
சிவப்பு மிளகாய்                2
கடுகு, உடைத்த உளுந்து, கருவேப்பிலை, சிறிதளவு எடுத்துக்கொள்ளவும்.

                           செய்யும் முறை

* முதலில் ஊறவைத்த துவரம் பருப்பையும், பயித்தம் பருப்பையும் குக்கரில் 3 - 4 விசில் போட்டு வேகவைத்துக் கொள்ளவேண்டும்.

* பிறகு வெங்காயம் ,தக்காளி மற்றும் பச்சை மிளகாய் பொடியாக  நறுக்கிக்கொள்ளவும்.

* பின்பு  பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும். (மிக்ஸியில் அரைக்க வேண்டாம்).

* பின்பு ஒரு குழம்பு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உடைத்த உளுந்து, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும் வேண்டும்.

* தாளித்த பின்பு அதில் பச்சை மிளகாயும், வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். 

* வதக்கிய பின்பு அதில் நசுக்கி வைத்த  பூண்டு விழுது மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

* வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் , உப்பு  சேர்த்து மற்றும் வேகவைத்த பருப்பை ஊற்றி  இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். பயித்தம் பருப்பு சாம்பார் தயார்.     

No comments:

Post a Comment