Wikipedia

Search results

Friday, April 27, 2018

இறால் குருமா செய்வது எப்படி?

இறால் குருமா  

தேவையான பொருட்கள்

இறால்               –     500 கிராம்
வெங்காயம்           –     4
தக்காளி              –     2
இஞ்சி, பூண்டு விழுது –    2 தேக்கரண்டி
மஞ்சள்தூள்           –     1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்        –     2 தேக்கரண்டி
தனியாத்தூள்         -     2 தேக்கரண்டி
சோம்பு               –     1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்       –     2
தேங்காய்             –     அரை மூடி
எண்ணெய், உப்பு            –     தேவையான அளவு
கருவேப்பிலை        –     சிறிதளவு


அரைக்க வேண்டிய பொருட்கள் 

தேங்காய்             -     ஒரு கப் (அரைத் தேங்காய்)
பச்சை மிளகாய்       -     2
வெங்காயம்           –     4
தக்காளி              –     2
(பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி வதக்கி அரைக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
               
தாளிக்க வேண்டிய பொருட்கள்:

கடலெண்ணெய்      -     தேவைக்கு
சோம்பு               -     அரை தேக்கரண்டி
பட்டை               -     3 துண்டு
கிராம்பு              -     பத்து
கறிவேப்பிலை        -     ஒரு கொத்து


செய்முறை

* இறாலை குடல் நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

* தேங்காயை அரைத்து கொள்ளவும்.

* ஒரு கடாயில் வெங்காயத்தை வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.

* குழம்பு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,  அரைத்த வெங்கயத்தை போட்டு வதக்கவும்.

* அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்

* பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து இறாலைச் சேர்த்து வதக்கி சிறிது நிமிடம் வேக விடவும்.

* இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், தேவையான உப்பு சேர்த்து
வேக விடவும்.

* நன்கு கொதித்து வந்தவுடன் இறக்கவும். 

* சுவையான இறால் குருமா தயார்

No comments:

Post a Comment