Wikipedia

Search results

Friday, April 27, 2018

காராமணி கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி?

காராமணி கத்திரிக்காய் குழம்பு

தேவையான பொருள்கள் :

காராமணி (தட்டப்பயறு)   - 100 கிராம்
வெங்காயம்              -  2
தக்காளி                 -  1
கத்தரிக்காய்             -  3
பூண்டு                  -   4 பல்
மிளகாய்த் தூள்          -  2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்,            -  1/4 தேக்கரண்டி 
சோம்பு,                  - 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள்                1/4 தேக்கரண்டி
புளி                     -  எலுமிச்சை அளவு
உப்பு                      -  தேவையான அளவு
எண்ணெய்                 -  2 தேக்கரண்டி
கடுகு,                     -  1/4 தேக்கரண்டி
சீரகம்                      1/4 தேக்கரண்டி
வெந்தயம்                  1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்          -   2
தேங்காய் விழுது           -  2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை தேவைக்கேற்ப


செய்முறை;

* முளைகட்டிய காராமணியுடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வேக வைக்கவும். 

* வெந்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், பூண்டு சேர்த்து வேக வைக்கவும். 

* வெந்ததும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சோம்பு, சீரகத் தூள் மற்றும் புளிக் கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
.
* குழம்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து குழம்பில் சேர்க்கவும்

* தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும். 

* சுவையான காராமணி குழம்பு தயார்

* கொத்தமல்லித் தழை சேர்த்தால் வாசனைக் கூடும்

No comments:

Post a Comment